Sunday 5th of May 2024 05:58:59 PM GMT

LANGUAGE - TAMIL
ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பென  இந்தியாவில் 127 பேர் கைது!

ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பென இந்தியாவில் 127 பேர் கைது!


ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இந்தியாவில் இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய விசாரணை ஆணையத்தின் தலைமை அதிகாரி அலோக் மிட்டல் டெல்லியில் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டும் 33 ஐ.எஸ். சந்தேகநபர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைவிட உத்திரப் பிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 14 பேர் உட்பட நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை வழிநடத்திய ஹக்ரான் ஹாசிம் என்ற ஐ.எஸ். பயங்கரவாதியுடன் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் தொடர்பில் இருந்தது விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்போரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள் கைது செய்யப்படுவர்கள் எனவும் அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE